×

மனைவி, மைத்துனரை வெட்டிக்கொன்ற வாலிபர் கைது

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு வந்தபோது ஏற்பட்ட தகாத உறவு தகராறில் மனைவி, மைத்துனரை வெட்டிக் கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். மகாராஷ்டிர மாநிலம் நந்தேடு பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜ் (30). இவரது மனைவி மனிஷா (25). மகன்கள் ஷக்ஷம் (6), பிரக்யான் (4). மனிஷாவின் சகோதரர் ஹர்ஷவரதன்.

இவர்கள் அனைவரும் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வந்தனர். நேற்றிரவு சுவாமியை தரிசனம் செய்த இவர்கள், தாங்கள் தங்கியுள்ள திருப்பதி கபில தீர்த்தம் அருகே உள்ள தனியார் ஓட்டலுக்கு வந்தனர். இந்நிலையில் குழந்தைகள் தூங்கிய பின்னர், யுவராஜ், மனிஷாவிடம் என் அண்ணனுடன் நீ கள்ளத்தொடர்பு வைத்திருக்கிறாய் என்று கூறி தகராறு செய்துள்ளார்.

இதனால் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த யுவராஜ், மனிஷாவை பழம் வெட்டும் கத்தியால் சரமாரி வெட்டியுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஹர்ஷவர்தன் தடுக்க முயன்றார். அவரையும் சரமாரி வெட்டியுள்ளார். இதில் இருவரும் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தனர்.

பின்னர் யுவராஜ் திருப்பதி போலீசாருக்கு போன் செய்து, எனது மனைவியையும், மைத்துனரையும் கொலை செய்து விட்டேன் எனக்கூறியுள்ளார். இதையடுத்து போலீசார், சம்பவம் நடந்த ஓட்டலுக்கு விரைந்து சென்று யுவராஜை கைது செய்தனர். மேலும் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

The post மனைவி, மைத்துனரை வெட்டிக்கொன்ற வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Waliber ,Thirumalai ,Swami ,Tirupati Elumalayan Temple ,
× RELATED 8 மணிநேரம் காத்திருந்து திருப்பதியில்...