×

தங்க கவச வழக்கு: ஓபிஎஸ்-க்கு காலக்கெடு அளித்த நீதிமன்றம்

மதுரை: அதிமுக வழங்கிய முத்துராமலிங்க தேவர் சிலைக்கு உரிய தங்க கவசத்தை அதிமுக பொருளாளர் சீனிவாசனிடம் தரக் கோரிய வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு செவ்வாய் கிழமைக்குள் பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. வழக்கு குறித்து பதில் அளிக்க 2 வாரம் அவகாசம் தர வேண்டும் என்ற ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. 2 வாரம் அவகாசம் வழங்க மறுத்த நீதிபதி, செவ்வாய் கிழமைக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

The post தங்க கவச வழக்கு: ஓபிஎஸ்-க்கு காலக்கெடு அளித்த நீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : Madurai ,AIADMK ,treasurer ,Srinivasan ,Muthuramalinga ,Devar ,Dinakaran ,
× RELATED வாக்காளர் பட்டியலில் பெயர்கள்...