- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை வானிலை ஆய்வு நிலையம்
- சென்னை
- சென்னை வானிலையியல் ஆய்வுக்கட்டுரையில்
- சி.எம்.சி.
சென்னை: தமிழ்நாட்டில் அக்டோபர் 8, 9-ம் தேதிகளில் 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூரில் கனமழை பெய்யக்கூடும். சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று முதல் 7 நாட்களுக்கு தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னையில் 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; நகரின் ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் இருக்கக்கூடும்.
சூறைக்காற்று – மீனவர்களுக்கு எச்சரிக்கை:
இன்று குமரி கடலோரப் பகுதிகளின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மணிக்கு 45 முதல் 65 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீச வாய்ப்புள்ளதாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
The post தமிழகத்தில் அக்.8, 9-ல் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.