×

மும்பையில் 7 தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ: 7 பேர் பலி; 40-க்கும் மேற்பட்டோர் காயம்!!

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் கோரேகான் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். மும்பையின் கோரேகான் எம்ஜி சாலையில் 7 தளங்கள் கொண்ட ஜெய் பவானி கட்டிடம் ஒன்று உள்ளது. இங்கு அதிகாலை 3.05 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கட்டிடத்தின தரைத் தளத்தில் இருந்த கடைகளில் ஏற்பட்ட தீ அடுத்தடுத்த தளங்களுக்குப் பரவியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கட்டிடம், பார்க்கிங் வசதி என தீ பரவிய நிலையில், செய்வதறியாது திகைத்த மக்கள் அலறி அடித்துக் கொண்டு கட்டிடத்தில் இருந்து வெளியேறினர்/இருப்பினும் தரைத் தளத்தில் தீ பிடித்ததன் காரணம் என்ன என்பது தெரியவில்லை.

இதனிடையே தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயினை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 8 தீயணைப்பு வாகனங்கள், 5 ஜம்போ டாங்கர்கள், 3 தானியிங்கி டர்ன் டேபிள்ஸ் உள்பட பல்வேறு நவீன உபகரணங்களையும் காலை 6 மணியளவில் தான் தீயை வீரர்கள் அணைத்துள்ளனர். இந்த தீ விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர்.40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பத்தில் சிக்கி காயம் அடைந்தவர்கள் மும்பை ஹெச்பிடி மருத்துவமனை மற்றும் கூப்பர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அதிகாலையிலேயே நடந்த இந்தச் சம்பவம் மும்பையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post மும்பையில் 7 தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ: 7 பேர் பலி; 40-க்கும் மேற்பட்டோர் காயம்!! appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Goregaon ,Mumbai, Maharashtra ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 913 புள்ளிகள் உயர்வு..!!