×

கீரனூர் பகுதிக்கு கூடுதல் பஸ் வசதியின்றி புதுக்கோட்டையில் இன்று நடக்கிறது மின்நுகர்வோர் குறைதீர்கூட்டம்

புதுக்கோட்டை: தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், புதுக்கோட்டை மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் சேகர் தலைமையில் புதுக்கோட்டை கோட்டத்திற்குட்பட்ட புதுக்கோட்டை, இலுப்பூர் மற்றும் கந்தர்வகோட்டை பகுதிக்கான மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (5ம்தேதி) காலை 10.30 மணி முதல் 1 மணி வரை செயற்பொறியாளர் இயக்குதலும் காத்தலும் புதுக்கோட்டை அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதில் புதுக்கோட்டை கோட்டத்திற்குட்பட்ட மின்நுகர்வோர்கள் மற்றும் பொதுமக்கள் மேற்படி கூட்டத்தில் மேற்பார்வை பொறியாளரை நேரில் சந்தித்து தங்களின் மின்வாரிய சம்மந்தமான குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம். இத்தகவலை புதுக்கோட்டை இயக்குதலும் காத்தலும் செயற்பொறியாளர் முருகன் தெரிவித்துள்ளார்.

The post கீரனூர் பகுதிக்கு கூடுதல் பஸ் வசதியின்றி புதுக்கோட்டையில் இன்று நடக்கிறது மின்நுகர்வோர் குறைதீர்கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Pudukottai ,Kiranur ,Tamil Nadu Power Generation and Distribution Corporation ,Pudukottai Power Distribution Circle ,Shekhar ,
× RELATED மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்