×

பெரம்பலூர் அருகே நடுவில் குலை தள்ளிய அதிசய வாழை மரம் பொதுமக்கள் ஆச்சரியம்

பாடாலூர்: பெரம்பலூர் அருகே மரத்தின் நடுவில் குலை தள்ளிய அதிசய வாழையை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா டி.களத்தூர் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளியில் உள்ள தோட்டத்தில் வாழை மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதில், 7 அடி உயரம் வளர்ந்த கரிவாழை வகையை சேர்ந்த ஒரு வாழை மரத்தின் நடுவில் குலை தள்ளி உள்ளது. அதாவது 4 அடி உயரத்தில் மரத்தின் நடுப்பகுதியில் பூவில் இருந்து காய்கள் காய்த்து தற்போது வாழைத்தார் வளர்ந்து வருகிறது. பொதுவாக வாழை மரங்கள் மேற்பகுதியில் இலைகளுக்கு இடையில் இருந்தே குலை தள்ளும். ஆனால், டி.களத்தூர் கிராமத்தில் மரத்தின் நடுவே குலை தள்ளிய அதிசய வாழையை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.

The post பெரம்பலூர் அருகே நடுவில் குலை தள்ளிய அதிசய வாழை மரம் பொதுமக்கள் ஆச்சரியம் appeared first on Dinakaran.

Tags : Perambalur ,Badalur ,Perambalur district ,Dinakaran ,
× RELATED டி.களத்தூரில் குட்டையில் தவறி விழுந்து மாற்றுத்திறனாளி சாவு