×

தூய்மை பணி திட்டத்தில் பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

காளையார்கோவில், அக்.4: காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் காந்தியின் கனவு திட்டமான தூய்மை பாரத நிகழ்ச்சி நடைபெற்றது. காளையார்கோவில் ஒன்றியத்தில் உள்ள கீழக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் காந்தி ஜெயந்தி விழா மற்றும் தூய்மை பாரதம் தூய்மை பணி நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை ஆசிரியை தெய்வானை தலைமை வகித்தார். கணித பட்டதாரி ஆசிரியை மீனாட்சி வரவேற்புரை ஆற்றினார். மாணவ,மாணவிகள் அனைவரும் சுத்தத்திற்கான உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள்.

காந்தியின் வாழ்க்கை நம் எல்லோருக்கும் சேவை மனப்பான்மையை உருவாக்குகிறது என்று அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ஆரோக்கியசாமி உரையாற்றினார். காந்தியின் முகமூடிகளை மாணவ,மாணவிகள் அணிந்து நினைவு கூர்ந்தனர். கராத்தே மாஸ்டர் ராதா வாழ்த்துரை வழங்கினார். பின்பு பள்ளி வளாகத்தில் உள்ள மக்கும் குப்பைகளை, பச்சை குப்பை தொட்டியிலும் மக்காத குப்பைகளை சிவப்பு குப்பை தொட்டியிலும் தனித்தனியாக சேகரித்தனர்.

The post தூய்மை பணி திட்டத்தில் பள்ளி மாணவர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Kalyarko ,Gandhi ,Cleanliness Bharata ,Urratsi Union Neutral School ,Bulgariargo ,Dinakaraan ,
× RELATED ராஜீவ் காந்தி குறித்த விமர்சன...