×

ஆசிரியர்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: போராடும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: ஆசிரியர்கள் கடந்த 27ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் மீண்டும் ஈடுபட்டுள்ளனர். இவர்களோடு பகுதி நேர ஆசிரியர்களாக பணிபுரியும் சிறப்பாசிரியர்களும் தங்களுடைய கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது மாணவ, மாணவியரின் கல்வியினை பாதிக்க வழிவகுக்கும். முதல்வர் இதில் உடனடியாக தலையிட்டு, மேலும் காலம்தாழ்த்தாமல், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய உயர்வு முரண்பாட்டினை உடனடியாக களையவும், பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

The post ஆசிரியர்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Former ,O. Panneirselvam ,Dinakaraan ,
× RELATED மதவெறி பிடித்துள்ள பாஜக நாட்டுக்கு...