×

திருவாரூர் மத்திய கல்வி நிறுவனங்களில் படிக்கும் பிசி, எம்பிசி, சீர்மரபினர் இன மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை விண்ணப்பங்கள் வரவேற்பு

திருவாரூர்: மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் படிக்கும் பிசி, எம்பிசி மற்றும் சீர்மரபினர் இன மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் பிற மத்திய பல்கலைகழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த பிசி, எம்பிசி மற்றும் சீர்மரபினர் இன மாணவ, மாணவிகளின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மாணவ, மாணவிகள் ஒருவருக்கு ஆண்டிற்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை கல்வி உதவித்தொகை வழங்க தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

The post திருவாரூர் மத்திய கல்வி நிறுவனங்களில் படிக்கும் பிசி, எம்பிசி, சீர்மரபினர் இன மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை விண்ணப்பங்கள் வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : MBC ,Sirmarabinar ,Tiruvarur ,Central Educational ,Thiruvarur ,
× RELATED குறும்பர் சமூகத்தினரை MBC...