×

அமைச்சர் திறந்து வைத்தார் குறைகள் காணப்பட்ட ரூ.3.91 லட்சம் விதைநெல் விற்பனை செய்ய தடை ஆய்வின்போது ஆய்வாளர்கள் அதிரடி

நாகப்பட்டினம்: குறைகள் காணப்பட்ட ரூ.3.91 லட்சம் விதை நெல் விற்பனை செய்ய தடை விதித்து, விதைநெல் ஆய்வாளர்கள் நடவடிக்கை மேற்கொண்டனர். சென்னை விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று துறை இயக்குனர் அறிவுறுத்தலின் பேரில் நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தனியார் விதை விற்பனை நிலையங்களில் விதை ஆய்வு துணை இயக்குனர்கள் வாசுகி(மதுரை), சித்ரா (நாகப்பட்டினம்) ஆகியோர் தலைமையில் விதை ஆய்வாளர்கள் ராஜபாண்டி, அகிலா, கோபி உள்ளிட்ட குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். நடப்பு சம்பா தாளடி பருவத்தில் நெல் நாற்றங்கால் மற்றும் நடவு பணிகளில் விவசாயிகள் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். விதைப்புக்கு தேவையான விதைகள் இருப்பு வைக்கப்பட்டு அரசு அங்கீகாரம்பெற்ற தனியார் விதை விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு தரமான விதைகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 15 தனியார் விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் விதை உரிம விபரங்கள், விதை இருப்பு, கொள்முதல், விலைப்பட்டியல், விவசாயிகளுக்கு வழங்கப்படும் ரசீதுகள் ஆய்வு செய்யப்பட்டது.

விதைகளின் தரத்தை உறுதி செய்வதற்காக 65 எண்கள் விதை மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. இந்த விதைகள் பரிசோதனை நிலையங்களுக்கு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆய்வின்போது விதைச் சட்டத்தின் கீழ் குறைகள் காணப்பட்ட விதை விற்பனை நிலையங்களில் இருப்பில் இருந்த ரூ.3 லட்சத்து 91 ஆயிரத்து 980 மதிப்பில் 11 மெட்ரிக் கடன் விதை நெல்லை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டு அதற்கான ஆணை வழங்கப்பட்டது. ஆய்வின்போது நாகப்பட்டினம் விதை ஆய்வாளர் முருகராஜ் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post அமைச்சர் திறந்து வைத்தார் குறைகள் காணப்பட்ட ரூ.3.91 லட்சம் விதைநெல் விற்பனை செய்ய தடை ஆய்வின்போது ஆய்வாளர்கள் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Nagapattinam ,Dinakaran ,
× RELATED நாகையில் இருந்து 13ம் தேதி...