×

மழைநீர் வடிகால் பணியில் ஈடுபட்ட இன்ஜினியரை தாக்கி பைக் பறிப்பு: போதை ஆசாமி கைது

அண்ணாநகர்: முகப்பேர் நக்கீரன் சாலையில் மழைநீர் கால்வாய் பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு, நேற்று முன்தினம் ஒப்பந்த ஊழியர்கள் பணியில் ஈடுபட்டபோது, அதே பகுதியை சேர்ந்த முகேஷ்கண்ணா (21) உள்ளிட்ட 3 பேர், போதையில் ரகளையில் ஈடுபட்டு, ‘இங்கு யாரும் வேலை செய்ய கூடாது’ என மிரட்டியுள்ளனர். தகவலறிந்து பொறியாளர் கவிநிகலன் (28) அங்கு வந்து, போதை ஆசாமிகளை தட்டிக்கேட்டுள்ளார். ஆத்திரமடைந்த முகேஷ்கண்ணா உள்ளிட்ட 3 பேரும், பொறியாளரை சரமாரியாக தாக்கிவிட்டு, அவரது பைக்கை பறித்து சென்றுள்ளனர். இதில், காயமடைந்த பொறியாளர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

புகாரின்பேரில், ஜெ.ஜெ.நகர் போலீசார் வழக்கு பதிந்து, முகேஷ்கண்ணாவை கைது செய்து, அவரிடம் இருந்து பைக்கை பறிமுதல் செய்தனர். பின்னர், அவரை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள இருவரை தேடி வருகின்றனர்

The post மழைநீர் வடிகால் பணியில் ஈடுபட்ட இன்ஜினியரை தாக்கி பைக் பறிப்பு: போதை ஆசாமி கைது appeared first on Dinakaran.

Tags : Annanagar ,Mukappher Nakiran Road ,
× RELATED சென்னை அண்ணா நகரில் உள்ள பிரபல வணிக...