×

விருத்தாசலம் அருகே பிளஸ் 2 மாணவன் குத்திக்கொலை

ஸ்ரீமுஷ்ணம்: விருத்தாசலம் அருகே இன்று காலை பிளஸ் 2 மாணவர் கத்தியால் குத்திக்கொல்லப்பட்டார். இது தொடர்பாக தப்பியோடிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் முஷ்ணம் அருகே மேல்புளியங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமணி. கேரளாவில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மகன் ஜீவா (17). இவர் விருத்தாசலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். தொடர் விடுமுறை முடிந்து பள்ளிக்கு செல்வதற்காக இன்று காலை மேல்புளியங்குடி பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அருகில் உள்ள பெலாந்துறை வாய்க்கால் அருகில் சிறுநீர் கழிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் ஆனந்த் (22) பின்தொடர்ந்து சென்று ஜீவாவை கத்தியால் சரமாரி குத்தி உள்ளார். இதில் பலத்த காயமடைந்த ஜீவா ரத்தவெள்ளத்தில் சரிந்தார். உடனே ஆனந்த் தப்பியோடி விட்டார். சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு ஜீவாவை விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து முஷ்ணம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில், ஏற்கனவே ஆனந்தின் செல்போன் உடைத்த விவகாரத்தில் அவர் ஜீவாவிடம் தகராறு செய்ததாக தெரிகிறது. இதனால் கொலை நடந்ததா? அல்லது காதல் விவகாரத்தில் கொலை நடந்ததா? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பிளஸ் 2 மாணவர் கத்தியால் குத்திக்கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post விருத்தாசலம் அருகே பிளஸ் 2 மாணவன் குத்திக்கொலை appeared first on Dinakaran.

Tags : Vridthachalam ,Srimushnam ,Dinakaran ,
× RELATED விருத்தாசலம் அருகே ரயிலில் இருந்து...