×

‘காவிரி பிரச்னையில் கர்நாடக விவசாயிகளை தூண்டும் பாஜ’

திருமங்கலம்: மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி, அவரது சிலைக்கு நேற்று காங்கிரஸ் சார்பில் விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.பின்னர் அவர் அளித்த பேட்டி: காவிரி பிரச்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்ன நடவடிக்கை எடுக்கிறாரோ, அதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் உறுதுணையாக இருக்கும். அனைத்து கட்சி கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து பேசும்போது, காவிரி பிரச்னைக்காக போராடும் தமிழக அரசுக்கு துணை நிற்போம். இந்த பிரச்னைக்கு முக்கிய காரணம் பாஜ தான்.

குழந்தையை கிள்ளிவிட்டு அவர்கள் தொட்டிலையும் ஆட்டுகின்றனர். கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் முதல் 15 நாட்கள் பிரச்னை இல்லாமல் தண்ணீர் கொடுத்தார். இதனை கண்ட கர்நாடக பாஜவினர், விவசாயிகளை தூண்டிவிட்டு போராட்டம் நடத்த வைத்தனர். அரசியல் லாபத்திற்காக பாஜ, கர்நாடகாவில் விவசாயிகளை தூண்டிவிட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் அண்ணாமலையும், பாஜவினரும் இந்த விஷயத்தில் அமைதி காக்கின்றனர். தற்போது அண்ணாமலை டெல்லி சென்றுள்ளார். அங்கு காவிரி விஷயத்தில் எடியூரப்பா, பொம்மை உள்ளிட்டோர் தலையிடக்கூடாது என கூறுவாரா?. இவ்வாறு அவர் கூறினார்.

The post ‘காவிரி பிரச்னையில் கர்நாடக விவசாயிகளை தூண்டும் பாஜ’ appeared first on Dinakaran.

Tags : Thirumangalam ,Madurai district ,Mahatma Gandhi ,Vrutunagar ,Congress ,
× RELATED திருமங்கலம் பகுதியில்...