×

சென்னைக்கு வந்த விமானத்தில் நடுவானில் இயந்திர கோளாறு: லுப்தான்சா நகருக்கே திரும்ப சென்றது, பயணிகள் தவிப்பு

சென்னை: ஜெர்மன் பிராங்க்பர்ட் நகரில் இருந்து சென்னை வரும் லூப்தான்ஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், தினமும் நள்ளிரவு 12.05 மணிக்கு சென்னைக்கு வந்துவிட்டு, மீண்டும் அதிகாலை 1.55 மணிக்கு பிராங்க்பர்ட் புறப்பட்டு செல்லும். அதேபோல், நேற்று முன்தினம் மாலை, பிராங்பர்ட்டிலிருந்து 286 பயணிகளுடன் புறப்பட்ட லூப்தான்ஷா ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த விமானம் அவசரமாக திரும்பிச் சென்று, மீண்டும் பிராங்க்பர்ட் நகரிலேயே தரை இறங்கியது.

இந்நிலையில் விமானத்தில் ஏற்பட்டுள்ள இயந்திர கோளாறை உடனடியாக சரி செய்ய முடியாததால், சென்னை வரவேண்டிய அந்த விமானம் ரத்து செய்யப்பட்டது. இந்த விமானம் ரத்து குறித்து பயணிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து பயணிகளிடம் சென்னை விமான நிலைய அதிகாரிகள், நிலைமையை விளக்கி இதே டிக்கெட்டில் நாளை (இன்று) செவ்வாய்க்கிழமை அதிகாலை விமானம் புறப்பட்டு செல்லும் என்று பயணிகளை திருப்பி அனுப்பினர். இதனால் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

The post சென்னைக்கு வந்த விமானத்தில் நடுவானில் இயந்திர கோளாறு: லுப்தான்சா நகருக்கே திரும்ப சென்றது, பயணிகள் தவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Lufthansa ,Luptansha Airlines ,Frankfurt ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...