×

குடிபோதையில் சிகரெட் பிடித்தவாறு டூவீலரில் பெட்ரோல் பிடித்தவர் தீயில் கருகி பலி

 

திருப்போரூர், அக்.2: கேளம்பாக்கம் அடுத்த வேங்கட மங்கலம், ஜி.வி.கார்டன் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன் (55). இவர் மது பழக்கத்திற்கு அடிமையானவர். நேற்று முன் தினம் மாலை மது போதையில் இளங்கோவன் சிகரெட் பிடித்து கொண்டே, தனது இருசக்கர வாகனத்தில் இருந்து பெட்ரோலை ஒரு பாட்டிலில் பிடித்துள்ளார். இந்நிலையில், சிகரெட்டில் இருந்த தீ திடீரென பெட்ரோல் பாட்டிலில் பரவி, இளங்கோவன் மீதும் பரவியது.

இதனால், அவரது உடல் முழுவதும் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் தண்ணீரை ஊற்றி அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தகவலறிந்து, விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இளங்கோவனை மீட்டு, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக அவர் உயிரிழந்தார். இது குறித்து தாழம்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

The post குடிபோதையில் சிகரெட் பிடித்தவாறு டூவீலரில் பெட்ரோல் பிடித்தவர் தீயில் கருகி பலி appeared first on Dinakaran.

Tags : Thiruporur ,Ilangovan ,GV Garden ,Venkata Mangalam ,Kelambakkam ,
× RELATED திருப்போரூர் பேரூராட்சியில் டாஸ்மாக் இடமாற்றம் செய்ய கோரிக்கை