×

கீழடியில் 9ம் கட்ட அகழாய்வு நிறைவு: 800க்கும் அதிக பொருட்கள் கண்டெடுப்பு

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், கீழடியில் ஒன்பதாம் கட்ட அகழாய்வு பணிகளை கடந்த ஏப்.6ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கீழடியில் வீரணன் நிலத்தில் 14 குழிகள் தோண்டப்பட்டு 800க்கும் மேற்பட்ட தொல் பொருட்கள் கண்டறியப்பட்டன. கொந்தகையில் நடந்த நான்காம் கட்ட அகழாய்வில் 6 குழிகள் தோண்டப்பட்டு 24 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன. அதில் உள்ள எலும்பு கூடுகள் மண்டை ஓடுகள், சுடுமண் கிண்ணம், அழகிய வேலைப்பாடுகள் கொண்ட இரண்டு சூதுபவளங்களும் கண்டறியப்பட்டன. அகழாய்வுப் பணிகள் நேற்றுடன் நிறைவடைந்தது. அடுத்து பத்தாம் கட்ட அகழாய்வு, இந்திய தொல்லியல் துறையின் அனுமதி பெற்று ஜனவரியில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post கீழடியில் 9ம் கட்ட அகழாய்வு நிறைவு: 800க்கும் அதிக பொருட்கள் கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Tags : Gizadi ,Chief Minister ,M.K.Stalin ,Keezadi, Sivagangai district ,Keezadi ,
× RELATED பள்ளிக் கல்வியை நிறைவுசெய்து கல்லூரி...