×

மீஞ்சூர் அருகே ஏரியில் குளித்தபோது சேற்றில் சிக்கி சிறுவன் பலி

பொன்னேரி: மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட அன்பழகன் நகர் பகுதியில் வசித்து வருபவர் சரத்பாபு மகன் ஜெனித் (14). மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே உள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தான். இவன் நேற்று மாலை சக நண்பர்களான முகுந்த், சாய் சரவணன் ஆகியோருடன் மீஞ்சூர் அடுத்த புதுப்பேடு பகுதியில் உள்ள ஆணை மேடு ஏரியில் குளித்து கொண்டிருந்தான். இரவு ஆகி விட்டது. அப்போது, எதிர்பாராத விதமாக சகதியில் ஜெனித் சிக்கி கொண்டான்.

சக நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர். மிகுந்த போராட்டத்துக்கு பிறகு சக நண்பர்கள், ஜெனித்தை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். உடனடியாக உறவினர்களுக்கும் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து மீஞ்சூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஜெனித் இறந்து கிடந்தது தெரியவந்தது. உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மீஞ்சூர் அருகே ஏரியில் குளித்தபோது சேற்றில் சிக்கி சிறுவன் பலி appeared first on Dinakaran.

Tags : Meenjoor ,Ponneri ,Sarathbabu ,Zenith ,Anbazhagan Nagar ,
× RELATED மீஞ்சூரில் தலை, கைகள் துண்டித்து...