×

கோயில் விழாவுக்கு வந்தவர் மர்ம சாவு

புதுக்கோட்டை, செப்.30: ஏரல், கொத்தளரிவிளையை சேர்ந்தவர் சண்முகவேல் (55). சென்னை சாலிகிராமம், முத்தமிழ்நகரில் சொந்தமாக மரக்கடை நடத்தி வருகிறார். இவர் கோயில் கொடை விழாவிற்காக சொந்த ஊரான கொத்தளரிவிளைக்கு வந்துள்ளார். நேற்று பொட்டல் குளம் பாலத்தின் தடுப்புச்சுவரில் படுத்து தூங்கியவர் மர்மமான முறையில் இறந்தார். புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி தலைமையிலான போலீசார் சண்முகவேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குடிபோதையில் அவர் கீழே விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post கோயில் விழாவுக்கு வந்தவர் மர்ம சாவு appeared first on Dinakaran.

Tags : Marma Sau ,Pudukottai ,Sanmugavel ,Kothalarivilai, Eral ,Muthamilnagar, Saligramam, Chennai ,
× RELATED குடியிருப்பு பகுதிகளில் கடைசி...