×

ஜூசில் விஷம் கலந்து 2 குழந்தைகள் கொலை: தாய் தற்கொலை முயற்சி

சங்கராபுரம்: கணவனுடன் ஏற்பட்ட தகராறில் மனைவி, குழந்தைகளுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து தானும் குடித்தார். இதில் 2 குழந்தைகள் உயிரிழந்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்துள்ள மல்லாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தாமோதரன் கூலி தொழிலாளி. இவரது மனைவி பாரதி (28). இத்தம்பதிக்கு 2 ஆண் குழந்தை, ஒரு பெண் குழந்தை உள்ளது. குடும்ப பிரச்னை காரணமாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கமாம். இந்நிலையில் கடந்த 25ம் தேதி கணவன், மனைவி இடையே ஏற்பட்ட தராறில் ஆத்திரமடைந்த பாரதி, குழந்தைகள் சஞ்சய்(10), மதியழகி (8) ஆகியோருக்கு குளிர்பானத்தில் எலி பேஸ்ட் கலந்து கொடுத்துவிட்டு, தானும் குடித்துள்ளார்.

தாயும், குழந்தைகளும் வீட்டில் மயங்கி கிடப்பதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையிலும், தொடர்ந்து சேலம் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். இதில் 2 குழந்தைகளும் தீவிர சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். தாய் பாரதிக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடைசியாக பிறந்த ஆண் குழந்தைக்கு (8மாதம்) பாரதி விஷம் கொடுக்காததால் உயிர்தப்பியது.

The post ஜூசில் விஷம் கலந்து 2 குழந்தைகள் கொலை: தாய் தற்கொலை முயற்சி appeared first on Dinakaran.

Tags : Shankarapuram ,
× RELATED சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும்