×

தாம்பரம்-மங்களூரு இடையே பண்டிகை கால சிறப்பு ரயில்

சேலம்: ஆயுதபூஜை, தீபாவளி போன்ற பண்டிகை காலம் நெருங்கி வருவதால், ரயில்களில் பயணிகளின் கூட்ட நெரிசல் அதிகரித்துள்ளது. இதனால், பண்டிகை கால சிறப்பு கட்டண சிறப்பு ரயில்களை இயக்கும் பணியில் ரயில்வே நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இந்தவகையில், சேலம், ஈரோடு, கோவை வழியே பண்டிகை கால சிறப்பு ரயிலாக தாம்பரம்-மங்களூரு இடையே வாராந்திர சிறப்பு ரயிலை இயக்குவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதன்படி, தாம்பரம்-மங்களூரு வாராந்திர சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06049) அக்டோபர் 6, 13, 20, 27ம் தேதிகளில் (வெள்ளி தோறும்) இயக்கப்படுகிறது.

தாம்பரத்தில் மதியம் 1.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில், எழும்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியே சேலத்திற்கு இரவு 7.20 மணிக்கு வந்து சேர்கிறது. பின்னர், 5 நிமிடத்தில் புறப்பட்டு ஈரோட்டிற்கு இரவு 8.25க்கும், திருப்பூருக்கு இரவு 9.13க்கும், கோவைக்கு இரவு 10.12க்கும் சென்று, பாலக்காடு, கோழிக்கோடு, பையனூர், காசர்கோடு வழியே மங்களூருக்கு அடுத்தநாள் காலை 7.30 மணிக்கு சென்றடைகிறது. மறுமார்க்கத்தில், மங்களூரு-தாம்பரம் வாராந்திர சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06050) இன்று (30ம் தேதி), அக்டோபர் 7, 14, 21, 28ம் தேதிகளில் (சனிக்கிழமை தோறும்) இயக்கப்படுகிறது.

மங்களூரில் மதியம் 12 மணிக்கு புறப்படும் இந்த ரயில், கோவைக்கு இரவு 7.32க்கும், திருப்பூருக்கு இரவு 8.12க்கும், ஈரோட்டிற்கு இரவு 9.10க்கும் வந்து சேலத்திற்கு இரவு 10.10 மணிக்கு வந்தடைகிறது. பின்னர், 5 நிமிடத்தில் புறப்பட்டு, ஜோலார்பேட்டை, காட்பாடி வழியே தாம்பரத்திற்கு அடுத்தநாள் அதிகாலை 5 மணிக்கு சென்றடைகிறது. இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தற்போது நடந்து வருகிறது. இதனை பயணிகள் பயன்படுத்திக் கொள்ள தெற்கு ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

The post தாம்பரம்-மங்களூரு இடையே பண்டிகை கால சிறப்பு ரயில் appeared first on Dinakaran.

Tags : Tambaram ,Mangaluru ,Salem ,Ayudha Puja ,Diwali ,
× RELATED தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கத்தில்...