×

பூலித்தேவர் சிலைக்கு ஆளுநர் மரியாதை

புளியங்குடி: தென்காசி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்த ஆளுநர் ஆர்.என்.ரவி புளியங்குடி அருகே நெற்கட்டும்செவலில் உள்ள பூலித்தேவர் அரண்மனைக்கு வந்தார். அவருக்கு ஊர் மக்கள் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து மாமன்னர் பூலித்தேவர் சிலைக்கு கவர்னர் ஆர்.என்.ரவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பூலித்தேவர் அரண்மனையை சுற்றி பார்வையிட்டு வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டார். பூலித்தேவரின் வீரம் மற்றும் அவரது தியாகங்களை கேட்டறிந்தார். பின்னர் அங்கிருந்து பச்சேரியில் உள்ள ஒண்டி வீரன் நினைவிடத்திலும், வெண்ணி காலடியின் படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

The post பூலித்தேவர் சிலைக்கு ஆளுநர் மரியாதை appeared first on Dinakaran.

Tags : Governor ,Pulithevar ,Puliangudi ,Governor RN ,Ravi ,Tenkasi ,Nelkotumcheval ,Dinakaran ,
× RELATED பல மாதங்களாக கிடப்பில் போட்டிருந்த 5...