×

நீர்மட்டம் 22 அடியை எட்டும் நிலையில் செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு எப்போது? அதிகாரிகள் ஆலோசனை

குன்றத்துார்: தொடர் மழையின்காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் 22 அடியை எட்ட இருப்பதால், உபரி நீரை திறப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாகவும், கிருஷ்ணா நதி நீர் வரத்து காரணமாகவும் செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. இன்று காலை நேர நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21.50 அடியாகவும், மொத்த கொள்ளளவு 2986 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 705 கன அடியாக உள்ளது.

சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக ஏரியில் இருந்து வினாடிக்கு 104 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. அணையின் பாதுகாப்பு கருதி நீர்மட்டம் 22 அடி தொட்டதும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறந்துவிடப்படுவது வழக்கம். தற்போது பருவ மழை தொடங்க உள்ள நிலையில் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பதாலும், 22 அடியை எட்ட இருப்பதாலும் ஏரியிலிருந்து உபரி நீரை திறப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

The post நீர்மட்டம் 22 அடியை எட்டும் நிலையில் செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு எப்போது? அதிகாரிகள் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Sembarambakkam ,Kunratthar ,Chembarambakkam lake ,Dinakaran ,
× RELATED பூந்தமல்லி அருகே பள்ளி வேனில்...