×

வள்ளிமலை அருகே நீர்நிலைகளில் கோழி முட்டை கழிவுகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு

*நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பொன்னை : வள்ளிமலை அருகே நீர்நிலைகளில் கோழி முட்டை கழிவுகளை கொட்டி செல்வதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வேலூர் மாவட்டம், வள்ளிமலை அடுத்த மலைமேல்புரம் பகுதியில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு அரசுக்கு சொந்தமான இடத்தில் நீர்நிலை மற்றும் சிறு குளங்கள் உள்ளன.

இந்நிலையில், இந்த நீர்நிலை பகுதிகளில் தனியார் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கோழி முட்டை கழிவுகளை இரவு நேரத்தில் வாகனங்களில் கொண்டு வந்து கொட்டிவிட்டு செல்கின்றனர்.தற்போது அப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால்சிறுகுளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. ஆனால், கோழி முட்டை கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதால் சுகாதார சீர்
கேடு நிலவுவதுடன் அருகே வசிக்கும் மக்கள் துர்நாற்றத்தால் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு, நீர்நிலை பகுதிகளில் கோழி முட்டை கழிவுகளை கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். மேலும், இதுபோல் கழிவுகளை கொட்டுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post வள்ளிமலை அருகே நீர்நிலைகளில் கோழி முட்டை கழிவுகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு appeared first on Dinakaran.

Tags : Vallimalai ,Ponnai ,Dinakaran ,
× RELATED ஊராட்சி செயலாளர், மனைவி மீது சொத்து...