×

சித்தா திரைப்பட விவகாரம்!: சித்தார்த் போன்ற நடிகருக்கு தொந்தரவு தருவதை ஏற்க முடியாது..கன்னட மக்களின் சார்பாக மன்னிப்பு கோரிய பிரகாஷ்ராஜ்..!!

சென்னை: நடிகர் சித்தார்த்திடம் கன்னட அமைப்பினர் தகராறு செய்ததற்கு நடிகர் பிரகாஷ் ராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார். காவிரி பிரச்னையை முன்வைத்து நடிகர் சித்தாத்திற்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததற்கு பிரகாஷ் ராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள பிரகாஷ்ராஜ், நீண்ட காலமாக தொடரும் காவிரி பிரச்னையை தீர்க்காத அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் ஒன்றிய அரசுக்கு நெருக்கடி கொடுக்காத எம்.பி.க்களிடம் கேள்வி கேட்பதற்கு பதிலாக சித்தார்த் போன்ற நடிகரை தொந்தரவு செய்வதை ஏற்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒரு கன்னடனாக, கன்னட மக்களின் சார்பாக மன்னிப்பு கேட்டு கொள்வதாகவும் அவர் பதிவிட்டுள்ளார். முன்னதாக நடிகர் சித்தார்த் தயாரித்து நடித்துள்ள சித்தா திரைப்படம் குறித்த செய்தியாளர் சந்திப்பு, பெங்களூருவில் உள்ள எஸ்.ஆர்.பி. திரையரங்கில் நடைபெற்றது. இதில் சித்தார்த் பேசிக் கொண்டிருக்கும் போது அரங்கிற்குள் திடீரென நுழைந்த கன்னட அமைப்பினர், காவிரி பிரச்சனை தொடர்பான முழு அடைப்பு போராட்டம் நடக்கும் போது இதெல்லாம் தேவையா? என்று கேட்டு தகராறில் ஈடுபட்டனர். கன்னட அமைப்பினரின் போராட்டத்தை தொடர்ந்து சித்தார்த் பேசுவதை பாதியில் நிறுத்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

The post சித்தா திரைப்பட விவகாரம்!: சித்தார்த் போன்ற நடிகருக்கு தொந்தரவு தருவதை ஏற்க முடியாது..கன்னட மக்களின் சார்பாக மன்னிப்பு கோரிய பிரகாஷ்ராஜ்..!! appeared first on Dinakaran.

Tags : Siddharth ,Prakashraj ,Chennai ,Prakash Raj ,Siddha ,
× RELATED உத்தரப்பிரதேசத்தில் கிராமத்திற்குள்...