×

இந்திய மாநிலங்களில் தமிழகம் முன்னோடி செந்துறையில் கலைஞர் நூற்றாண்டு விழா 1,592 பேருக்கு ரூ.15.15 கோடி கடன் வழங்கல்

அரியலூர், செப்.29: கூட்டுறவுத் துறை சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா முன்னிட்டு நேற்று செந்துறையில் கடன் வழங்கும் மேளா போக்குவரத்துத் துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், 1,592 பயனாளிகளுக்கு ரூ.15.15 கோடி அளவிற்கு கடன்கள் வழங்கப்பட்டது. இதில், பயிர்கடனாக ரூ.9.05 கோடி அளவிலும், 35 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 2.96 கோடி அளவிலும், மாற்றுத்திறனாளிகள் கடன்கள் 11 பேருக்கு ரூ.5.5 லட்சத்திலும், கால்நடை வளர்ப்பு நடைமுறை மூலதன கடனாக 171 பேருக்கு ரூ.54.16 லட்சத்திலும், டாம்கோ கடன் ரூ.12.82 லட்சத்திலும், வீட்டு வசதிக் கடன் 5 பேருக்கு ரூ.57 லட்சத்திலும், வீட்டு அடமானக் கடன் 2 நபர்களுக்கு ரூ.22.75 லட்சத்திலும், அரியலூர் கூட்டுறவு வங்கி சார்பாக சிறுசேமிப்பு திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு உண்டியல் மற்றும் கணக்குப் புத்தகத்தினையும் அமைச்சர் வழங்கினார்.
அரியலூர் மாவட்டத்தில் 64 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள் 9, ஒரு நகர கூட்டுறவு வங்கி மற்றும் மாவட்டத்திலுள்ள மற்ற கூட்டுறவு சங்கங்கள் சார்பில், மேற்படி கடன்கள் வழங்கப்பட்டு பயனாளிகளுக்கு வாழ்வாதாரங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வின் தொடர்ச்சியாக மாவட்டத்தில் கூட்டுறவு அமைப்புகள் மூலம் கடன் மேளாக்கள் அதிகளவில் நடத்திடவும், அதன் மூலம் புதிய உறுப்பினர்கள் சேர்த்திடவும், இதுவரை கூட்டுறவு சங்கங்களில் கடன் பெறாதவர்களுக்கு கடன்கள் வழங்கிடவும் திட்டமிடப்பட்டு அதற்கான செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அரியலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 110 நியாய விலைக்கடைகளில் எதிர்வரும் அக்.3 முதல் டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலம் பொருட்கள் விநியோகம் செய்வதற்கான இயந்திரத்தை அமைச்சர் வழங்கி டிஜிட்டல் பண பரிவர்த்தனையை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் தீபாசங்கரி, திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் / செயலாட்சியர் அரசு, வட்டாட்சியர் பாக்கியம் விக்டோரியா, செந்துறை தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் ,வடக்கு ஒன்றிய செயலாளர் எழில் மாறன், மாவட்ட அயலாக்க அணி துணை அமைப்பாளர் ராமராஜன் மற்றும் அரசு அலுவலர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post இந்திய மாநிலங்களில் தமிழகம் முன்னோடி செந்துறையில் கலைஞர் நூற்றாண்டு விழா 1,592 பேருக்கு ரூ.15.15 கோடி கடன் வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Centenary of Artist Centenary ,Senturai ,Ariyalur ,Cooperative Department ,Sentura ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...