×

பரமக்குடியில் சாலையில் திரிந்த மாடுகளுக்கு அபராதம்

பரமக்குடி,செப்.29: பரமக்குடியில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடித்து பரமக்குடி நகராட்சி சுகாதாரத்துறை சார்பாக அபராதம் விதிக்கப்பட்டது.  பரமக்குடி நகராட்சி பகுதிகளில் உள்ள சாலையோரங்களில் வீடுகளில் வளர்க்கப்படும் மாடுகள் சாலைகளில் சுற்றி திரிவதால் போக்குவரத்து பாதிப்பு மற்றும் விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து மாடுகளை தெருக்களில் விடுவதை அதன் உரிமையாளர்கள் தவிர்க்க வேண்டும் என நகராட்சி சார்பாக அறிவிப்பு வெளியிட்டது.

இதன் தொடர்ச்சியாக நேற்று நகராட்சி சுகாதார அலுவலர் ஜெயராமன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் ஜெகதீஷ்,மதன் மற்றும் மேற்பார்வையாளர்கள் சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடித்து நகராட்சியின் வளாகத்தில் கட்டி வைத்தனர். மேலும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, மாடுகளை பாதுகாப்பாக வீட்டில் கட்டி வைக்க வேண்டும். மீறி சாலையில் சுற்றி திரிந்தால் அபராதம் விதிக்கப்பட்டு சட்டப்படி மேல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

The post பரமக்குடியில் சாலையில் திரிந்த மாடுகளுக்கு அபராதம் appeared first on Dinakaran.

Tags : Paramakudi ,Paramakkudi ,health ,Dinakaran ,
× RELATED பரமக்குடியில் வாக்காளர் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி