×

பண்ருட்டி பணிமனையில் தீ 4 பஸ்கள் நாசம்

பண்ருட்டி: கடலூர் மாவட்டம் பண்ருட்டி-கும்பகோணம் சாலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனை(விழுப்புரம் கோட்டம்) இயங்கி வருகிறது. இந்த வளாகத்தில் பழுதடைந்த வாகனங்களும் ஒரு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பழுதடைந்த உதிரி பாகங்களும் ஒரு பகுதியில் குவித்து வைக்கப்பட்டு, காஸ் கட்டிங் இயந்திரம் மூலமாக உடைக்கும் பணி நடந்து வந்தது. நேற்றுமுன்தினம் இப்பணி முடிந்து தொழிலாளர்கள் சென்று விட்டனர். ஆனால் காஸ் கட்டிங் மூலம் ஏற்பட்ட தீ, அணையாமல் புகைந்து கொண்டே இருந்துள்ளது.

நள்ளிரவு 12 மணிஅளவில் திடீரென தீப்பற்றி அருகில் நிறுத்தப்பட்டிருந்த பஸ்கள் மீது பரவியது. சிறிது நேரத்தில் தீ மளமளவென பற்றி எரிந்தது. தகவலறிந்து பண்ருட்டி தீயணைப்பு நிலைய வீரர்கள் 4 வாகனங்களில் சென்று ஒன்றரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் ஒரு பஸ் முற்றிலும் எரிந்து நாசமானது. மேலும் 3 பஸ்கள் பாதியளவு சேதமடைந்தது.

The post பண்ருட்டி பணிமனையில் தீ 4 பஸ்கள் நாசம் appeared first on Dinakaran.

Tags : Palruti ,PANRUTI ,Tamil Nadu Government Transport Corporation Work ,Viluppuram Gotam ,PANRUTI- ,Kumbakonam road, Cuddalore district ,Nasam ,
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு