×

குடிநீர் குழாயை உடைத்து சேதப்படுத்திய வாலிபர் கைது

ஓட்டப்பிடாரம், செப். 29: ஓட்டப்பிடாரம் யூனியன், கச்சேரி தளவாய்புரம் கிழக்குத் தெருவை சேர்ந்தவர் காசி பாண்டி (30). இவர் அதே கிராமத்தில் உள்ள பஞ்சாயத்துக்கு சொந்தமான குடிநீர் குழாயை உடைத்து சேதப்படுத்தினாராம். இதுகுறித்து தெரியவந்த பஞ். தலைவர் சேர்ம பொன்செல்வி, ஓட்டப்பிடாரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப் பதிந்த எஸ்ஐ சுந்தரம் மற்றும் போலீசார், குடிநீர் குழாயை சேதப்படுத்திய காசிபாண்டியை கைது செய்தனர்.

 

The post குடிநீர் குழாயை உடைத்து சேதப்படுத்திய வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Ottapidaram ,Kasi Pandi ,Ottapidaram Union ,Kacheri Thalavaipuram East Street ,
× RELATED ஓட்டப்பிடாரம் அருகே பேவர் பிளாக் சாலை பணி தொடக்கம்