×

விகேபுரம் அருகே 10 அடி மலைபாம்பு பிடிபட்டது

விகேபுரம், செப்.29:விகேபுரம் அருகே உள்ள வடமலைசமுத்திரம் மெயின்ரோட்டில் நேற்று முன்தினம் இரவு சுமார் 9 மணியளவில் 10 அடி நீளமுள்ள மலைபாம்பு சென்று கொண்டிருந்தது. இதை கண்ட அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் ஊருக்குள் நுழைய முயன்ற மலைபாம்பை பிடித்தனர். பின்னர் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பாம்பை மீட்டு வனப்பகுதிக்குள் பாத்திரமாக விட்டனர்.

The post விகேபுரம் அருகே 10 அடி மலைபாம்பு பிடிபட்டது appeared first on Dinakaran.

Tags : Vikepuram ,Vadamalaisamutram ,Dinakaran ,
× RELATED மின் சிக்கனம், பாதுகாப்பு துண்டுபிரசுரங்கள் வழங்கல்