×

தொடர் விடுமுறை ஒரேநாளில் 1.25 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்

சென்னை: மிலாது நபி, வார விடுமுறை மற்றும் காந்தி ஜெயந்தி என தொடர் விடுமுறையையொட்டி, சென்னையில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக நேற்று முன்தினம் இரவு ஏராளமான பயணிகள் உடைமைகளுடன் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குவிந்தனர். தென் மாவட்டங்கள் செல்லும் பேருந்துகள் மற்றும் ஆம்னி பேருந்துகளில் மக்கள் சென்றனர்.

நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் அரசு பேருந்துகள் மூலம் 1.25 லட்சம் பயணிகள் சொந்த ஊர் சென்றதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post தொடர் விடுமுறை ஒரேநாளில் 1.25 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Milavalam Prophet ,Gandhi Jayanti ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...