×

போலீசிடமிருந்து தப்பியோடியபோது தனியார் பேருந்து மோதி வாலிபர் பரிதாப பலி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே குண்டுகுளம் கிராமத்தை சேர்ந்தவர் லோகநாதன் மகன் சீனிவாசன் (27). இவர், கீழ்க்கதிர்பூர் அருகே உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் 30 மதுபாட்டில்களை வாங்கிக்கொண்டு சென்றபோது மதுவிலக்குப்பிரிவு போலீசார், வழிமறித்து பிடித்து அவரை டூவீலரில் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்துள்ளனர். டூ வீலரின் பின்னால் உட்கார்ந்து வந்து கொண்டிருந்த சீனிவாசன், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே வந்தபோது வாகனத்திலிருந்து இறங்கி தப்பி ஓடியிருக்கிறார்.

அப்போது, எதிரில் வந்த தனியார் பேருந்து எதிர்பாரதவிதமாக சீனிவாசன் மீது மோதியது. இவர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சீனிவாசன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் சீனிவாசனின் உறவினர்கள், விசிக உள்ளிட்டோர் போலீசார் முறையாக அழைத்து வராததால் தான் மரணம் நிகழ்ந்துள்ளது என்று கூறி சடலத்தை வாங்க மறுத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காஞ்சிபுரம் ஏடிஎஸ்பி சார்லஸ் தலமையிலான போலீசார், சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் உயிரிழந்த சீனிவாசனின் தந்தை லோகநாதன், காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் எஸ்பி சுதாகரிடம் கொடுத்துள்ள புகாரில், என் மகன் கூலிவேலை செய்து வருகிறான். அவனது இறப்பில் மர்மம் உள்ளது. காவல்துறையினரால் என் மகன் தாக்கப்பட்டுள்ளான், இதற்கு நீதி விசாரணை தேவை, தவறிழைத்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், குடும்பத்தாருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அம்மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

The post போலீசிடமிருந்து தப்பியோடியபோது தனியார் பேருந்து மோதி வாலிபர் பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Lokanathan ,Srinivasan ,Kundukulam ,Tasmac ,Kilikadirpur ,
× RELATED காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில்...