×

குஜராத் கடற்கரையில் ரூ.800 கோடி போதைபொருள் பறிமுதல்

காந்திதாம்: குஜராத் மாநிலம் கட்ச் கடற்கரையில் ரூ.800 கோடி மதிப்புள்ள கோகைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது குஜராத் மாநிலத்தில் கடற்கரை வழியாக அதிக அளவு போதைப்ெபாருள் இந்தியா முழுவதும் கொண்டு செல்லப்படுகிறது. இதையடுத்து கடற்கரை பகுதிகளில் போதைத்தடுப்பு பிரிவு போலீசார் கூடுதலாக கண்காணித்து வருகிறார்கள். இந்தநிலையில் குஜராத்தின் கட்ச் மாவட்டத்தின் காந்திதாம் நகருக்கு அருகில் உள்ள மிதி ரோஹர் கிராமத்தின் கடற்கரை பகுதியில் கொட்டப்பட்ட சுமார் 800 கோடி ரூபாய் மதிப்புள்ள 80 கிலோ கோகைன் போதைப்பொருளை போலீசார் மீட்டனர். இவை மொத்தம் 80 பாக்கெட்டுகள் ஆகும். ஒவ்வொன்றும் ஒரு கிலோ எடை கொண்டது என்று கட்ச்-கிழக்கு பிரிவின் காவல்துறை கண்காணிப்பாளர் சாகர் பாக்மர் கூறினார். பாகிஸ்தானில் இருந்து இவை கடத்தி வரப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.

The post குஜராத் கடற்கரையில் ரூ.800 கோடி போதைபொருள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Gujarat ,Gandhitam ,Kutch coast ,
× RELATED குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பல...