×

புதுமையின் ஆற்றல் மையமாக, பலருக்கு வழிகாட்டியாக இருந்தவர் எம்.எஸ்.சுவாமிநாதன்: பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்

டெல்லி: வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவையொட்டி பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். நெருக்கடியான காலத்தில் வேளாண்மையில் அவரது பணி பல மில்லியன் மக்களின் வாழ்க்கையை மாற்றியது . எம்.எஸ்.சுவாமிநாதனின் பணிகள் தேசத்தின் உணவு பாதுகாப்பை உறுதி செய்தது. புதுமையின் ஆற்றல் மையமாக, பலருக்கு வழிகாட்டியாக இருந்தவர் எம்.எஸ்.சுவாமிநாதன். ஆராய்ச்சி மற்றும் வழிகாட்டுதலில் அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு அழியா முத்திரையை பதித்துள்ளது.

The post புதுமையின் ஆற்றல் மையமாக, பலருக்கு வழிகாட்டியாக இருந்தவர் எம்.எஸ்.சுவாமிநாதன்: பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் appeared first on Dinakaran.

Tags : M. S.S. Swalaminathan ,PM ,Narendra Modi ,Delhi ,M. S.S. ,Swaraminathan ,M. S.S. Swaraminathan ,
× RELATED காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து...