×

தருமபுரி காரிமங்கலம் அருகே 5 கிலோ தங்கம் கொள்ளை: சேலம் சரக டிஐஜி ராஜேஸ்வரி விசாரணை

தருமபுரி: தருமபுரி காரிமங்கலம் அருகே 5 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில் சேலம் சரக டிஐஜி ராஜேஸ்வரி விசாரணை மேற்கொண்டுள்ளார். கோவை ராஜவீதியை சேர்ந்த நகைக்கடை ஒன்றிருக்கு தங்கநகைகள் வாங்குவதற்காக பெங்களூரு சென்றுவிட்டு.

சேலம் – தருமபுரி நெடுஞ்சாலை வழியாக விஜயகுமார், ஜெய்சன், சுரேஷ்குமார் உள்ளிட்ட 4 பேர் தங்கத்துடன் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை பின்தொடர்ந்து இரண்டு கார்களில் வந்தவர்கள் தங்கம் எடுத்து வந்த காரை வழிமறித்தனர். பின்னர் அதிலுள்ளவர்களை தாக்கிவிட்டு தங்கத்தோடு சேர்த்து காரையும் கடத்தி சென்றனர்.

தங்கத்தை பறிகொடுத்த கோவையை சேர்ந்த பிரசன்னா காரிமங்கலம் காவல் நிலையத்தில் கொடுத்த தகவலின் பேரில் விசாரணை நடைப்பெற்று வருகிறது. தங்கம் கொள்ளை தொடர்பாக எஸ்.பி. ஸ்டீபன் ஜேசுபாதம் நேரில் விசாரணை நடத்திய நிலையில் சேலம் சரக டிஐஜி ராஜேஸ்வரியும் விசாரணை நடத்தி வருகிறார்.

The post தருமபுரி காரிமங்கலம் அருகே 5 கிலோ தங்கம் கொள்ளை: சேலம் சரக டிஐஜி ராஜேஸ்வரி விசாரணை appeared first on Dinakaran.

Tags : Karimangalam ,Salem Saraka ,Rajeswari ,Tharumapuri ,Tarumapuri ,Dinakaran ,
× RELATED திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்