
நீலகிரி: உதகை அரசு கலைக் கல்லூரி முதல்வர் அருள் ஆண்டனி, தாவரவியல் இணை பேராசிரியர் ரவி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கல்லூரி விடுதியில் தங்கி படிக்க பட்டியலின மாணவர்களிடம் லஞ்சம் வாங்குவதாக எழுந்த புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரூ.10,000 லஞ்சம் பெற்று மாணவர்களை விடுதியில் தங்கி படிக்க அனுமதிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. வேறு துறைக்கு மாறுவதற்கு கல்லூரி மாணவர்களிடம் லஞ்சம் பெற்றதாக இணை பேராசிரியர் ரவி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
The post கல்லூரி விடுதியில் தங்கி படிக்க பட்டியலின மாணவர்களிடம் லஞ்சம்!: உதகை அரசு கலைக் கல்லூரி முதல்வர் சஸ்பெண்ட்..!! appeared first on Dinakaran.