×

இருசக்கர வாகனங்களால் நெரிசல் பூச்சி மருந்து குடித்த முதியவர் சிகிச்சை பலனின்றி சாவு

ஈரோடு, செப். 28: ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்துள்ள மொடப்பாளி தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (46). இவரது மனைவி தேன்மொழி. இவர்களது மகன் ஜீவபாரதி (22) திருமணமாகி தனியாக வசித்து வருகிறார். கிருஷ்ணகுமாரும், அவரது மனைவியும் மொடப்பாளி தோட்டத்தில் வசித்துக் கொண்டு விவசாயம் செய்து வந்தனர். இந்நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு முன், தவறி விழுந்ததில் கிருஷ்ணகுமாருக்கு வலது கை மணிக்கட்டு முறிந்தது. அதற்கு அவர் வைத்தியம் பார்த்து வந்தார்.

மேலும், கை வலி காரணமாக அவர் அடிக்கடி மது அருந்தியும் வந்தாராம். இந்நிலையில், கை வலியை பொறுக்க முடியாத கிருஷ்ணகுமார் தோட்டத்துக்காக வாங்கி வைத்திருந்த களைக்கொல்லி மருந்தை கடந்த 23ம் தேதி குடித்துவிட்டாராம்.உடனடியாக அவரது மனைவி தேன்மொழி அவரை அந்தியூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.பின்னர், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த கிருஷ்ணகுமார், சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் உயிரிழந்தார்.
இதுகுறித்து, அந்தியூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post இருசக்கர வாகனங்களால் நெரிசல் பூச்சி மருந்து குடித்த முதியவர் சிகிச்சை பலனின்றி சாவு appeared first on Dinakaran.

Tags : Erode ,Krishnakumar ,Modappali Estate ,Andhiyur, Erode district ,
× RELATED ஈரோடு மேற்கு தொகுதி வாக்கு இயந்திர...