
திருவண்ணாமலை, செப்.28: திருவண்ணாமலை எஸ்பி அலுவலகத்தில் நடந்த வாராந்திர சிறப்பு முகாமில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனடியாக விசாரணை செய்து தீர்வு அளிக்க வேண்டும் என்று சம்பந்தபட்ட எஸ்பியிடம் எஸ்பி உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலை எஸ்பி அலுவலகத்தில், கடந்த ஆண்டு டிசம்பர் முதல் வாரந்தோறும் புதன் கிழமையன்று சிறப்பு குறைதீர்வு கூட்டம் நடக்கிறது. போலீஸ் ஸ்டேஷன்களில் அளித்த தங்களின் புகார் மனுக்களுக்கு தீர்வு கிடைக்காத பொதுமக்கள், இக்கூட்டத்தில் மனு அளித்து பயன்பெறுகின்றனர். அதன்படி, திருவண்ணாமலை எஸ்பி அலுவலகத்தில், சிறப்பு குறைதீர்வு முகாம் எஸ்பி கார்த்திகேயன் தலைமையில் நேற்று நடந்தது. அதில், ஏடிஎஸ்பி பழனி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது, பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்று எஸ்பி கார்த்திகேயன் விசாரணை நடத்தினார். மேலும், சம்மந்தப்பட்ட சப் டிவிஷன் டிஎஸ்பியிடம் அந்த மனுவை அளித்து, உடனடியாக விசாரணை நடத்தி தீர்வு காணுமாறு எஸ்பி கார்த்திகேயன் உத்தரவிட்டார். நேற்று நடந்த முகாமில் 16 பேர் கோரிக்கை மனுக்களை அளித்தனர். முதற்கட்ட விசாரணை முடிந்த மனுக்கள், தொடர் நடவடிக்கைக்காக சம்மந்தப்பட்ட டிஎஸ்பிக்களுக்கு எஸ்பி கார்த்திகேயன் பரிந்துரை செய்தார். மேலும், சொத்து பிரச்சனை, பாகப்பிரிவினை தொடர்பாக அளிக்கப்பட்ட மனுக்கள் மீது, நீதிமன்றத்தின் மூலம் தீர்வு பெற அறிவுறுத்தப்பட்டனர்.
The post பொதுமக்கள் மனு மீது உடனடியாக விசாரித்து தீர்வு அளிக்க வேண்டும் டிஎஸ்பியிடம் எஸ்பி உத்தரவு திருவண்ணாமலை மாவட்டத்தில் வாராந்திர சிறப்பு குறைதீர்வு முகாம் appeared first on Dinakaran.