×

சமுதாய வளைகாப்பு விழா

அம்பை,செப்.28:அம்பாசமுத்திரம் நகராட்சியில் சமூக நலத்துறை சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத விழாவை முன்னிட்டு கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக அம்பை நகர்மன்ற தலைவர் பிரபாகர பாண்டியன் கலந்து கொண்டு கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருள்கள் வழங்கி வாழ்த்தினார். விழாவிற்கு வட்டார அலுவலர் சொர்ணலதா தலைமை தாங்கி வரவேற்றார். நகராட்சி துணைத்தலைவர் சிவசுப்பிரமணியன், கவுன்சிலர்கள் ஜோதிகலா சிங்கநாதம், லதா பிச்சையா முன்னிலை வகித்தனர். கவுன்சிலர் அழகம்மை மாரியப்பன் வாழ்த்துரை வழங்கினார். அம்பை வட்டார குழந்தைகள் திட்ட மேற்பார்வையாளர் ராஜேஷ்வரி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.விழாவில் பெண்கள் கர்ப்ப காலத்தில் தேவையான சத்தான உணவை சாப்பிட வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தானிய வகை தின்பண்டங்கள் மற்றும் காய்கறிகள் கண்காட்சி வைக்கப்பட்டிருந்தது.விழாவில் கவுன்சிலர்கள் கோதர் இஸ்மாயில், முத்துகிருஷ்ணன், ராமசாமி, மாவட்ட பிரதிநிதிகள் அண்ணாத்துரை, ராதாகிருஷ்ணன், மாவட்ட சார்பு அணி துணை அமைப்பாளர்கள் வனராஜ் பாண்டியன், சுடலைக்குமார், திமுக நிர்வாகிகள் முத்துதுரை, பிரேம், தங்கம், முத்துகுமார், சரவணன் சக்திவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post சமுதாய வளைகாப்பு விழா appeared first on Dinakaran.

Tags : Ambai ,National Nutrition Month ,Department of Social Welfare ,Ambasamudram Municipality ,Dinakaran ,
× RELATED அம்பையில் போதையில் ரகளை செய்தவர்கள் மீது வழக்கு