
மதுரை, செப். 28:நெல்லை சிஎஸ்ஐ டயோசீசன் நிர்வாகக் குழுவிற்கான தேர்தல் அறிவிப்பிற்கு தடை கோரி, அனீஷ் ஆசிர் என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தார். இந்த வழக்கில் இடைக்கால தடை இருந்த நிலையில், 2021ல் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். சட்டம்-ஒழுங்கு பிரச்னை காரணமாக நிர்வாகிகள் செயல்பட தடை விதித்து நெல்லை ஆர்டிஓ உத்தரவிட்டார். முந்தைய நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாததால் அனிஸ் ஆசிர் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது நெல்லை டயோசீசன் பிஷப் பர்னபாஸ் ஆஜரானார். அரசு தரப்பில், நெல்லை ஆர்டிஓ பிறப்பித்த உத்தரவை திரும்ப பெறுவதாகவும், நீதிமன்ற உத்தரவை மீறியதற்காக மன்னிப்பும் கோரப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தார். தேவைப்பட்டால் மனுதாரர் புதிதாக மனு செய்து நிவாரணம் பெறலாம் எனக்கூறி மனுவை முடித்து வைத்தார்.
The post நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நெல்லை பிஷப் ஆஜர் appeared first on Dinakaran.