×

சென்னை ஐஐடி தகவல் வெளிநாட்டு மாணவர்களுக்காக 215 ஏக்கரில் கல்வி வளாகம்

சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் தற்போது இயங்கி வரும் படிப்புகள் மற்றும் அதற்கான கட்டிட வசதிகளுடன், வெளிநாட்டு மாணவர்கள் தங்கி படிக்கும் வகையில் 215 ஏக்கரில் புதிய கல்வி வளாகம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்துக்கு ‘ஸான்ஸிபர்’ என்று பெயரிடப்பட உள்ளது. இந்த வளாகம் கட்டுமான பணி முடியும் வரை, அக்டோபர் 24ம் தேதி முதல் தற்காலிக கட்டிடத்தில் இயங்கும். முதல் கட்டமாக வெளிநாட்டு மாணவர்களுக்காக பி.எஸ் படிப்பில் 50 மாணவர்கள், எம்.டெக் படிப்பில் 15 முதல் 20 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.

இது குறித்து சென்னை ஐஐடியின் ஸான்ஸிபர் வளாக இயக்குநர் பிரீத்தி அகலாயம் அளித்த பேட்டி: ஸான்ஸிபர் வாளகம் ஒரு மாறுபட்ட வளாகமாக இருக்கும். ஆராய்ச்சிதான் எங்கள் முக்கிய நோக்கம். மேலும், தான்சானியா நாட்டை சேர்ந்த பெண்கள் இன்ஜினியரிங் படிக்க ஆர்வமாக உள்ளனர். அதேபோல் கென்யா மற்றும் எத்தியோப்பிய மாணவர்களும் அதிக அளவில் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். சென்னை ஐஐடி வளாகம் பசுமை மற்றும் வனவிலங்குகளுக்கு பெயர்போனது, அதேபோல்தான் தான் ஸான்ஸிபர் வளாகமும் அமைக்கப்படும். இந்த கட்டிடங்கள் இந்தியா மற்றும் ஸான்ஸிபர் கட்டிடவியலை கொண்டதாக இருக்கும். இன்னும் ஆறு மாதங்களில் இதற்கான பணிகள் தொடங்கப்படும்.

The post சென்னை ஐஐடி தகவல் வெளிநாட்டு மாணவர்களுக்காக 215 ஏக்கரில் கல்வி வளாகம் appeared first on Dinakaran.

Tags : IIT Chennai ,Chennai ,
× RELATED சென்னை ஐ.ஐ.டி.யில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி