×

அனந்தபுரி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் எழும்பூரிலிருந்து 20 நிமிடம் முன்னதாக புறப்படும்: தெற்கு ரயில்வே தகவல்

சென்னை: கேரளத்திற்கு இயக்கப்படும் அனந்தபுரி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் எழும்பூரில் இருந்து 20 நிமிடத்திற்கு முன்னதாக இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. சென்னை எழும்பூரிலிருந்து கேரள மாநிலம் கொல்லத்திற்கு இரவு 8.10 மணிக்கும், கொல்லத்திலிருந்து தினமும் மாலை 3.40 மணிக்கு சென்னை எழும்பூருக்கு அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் அதிவிரைவு ரயிலாக மாற்றி இயக்கப்பட உள்ளது. இதையடுத்து, இந்த அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை எழும்பூரில் இருந்து இரவு 8.10 மணிக்கு பதிலாக 20 நிமிடம் முன்னதாக இரவு 7.50 மணிக்கு புறப்படும்.

மேலும் இந்த ரயில் திருச்சிக்கு நள்ளிரவு 1.30 மணிக்கு பதிலாக 1.05 மணிக்கும், மதுரைக்கு அதிகாலை 3.50 மணிக்கு பதிலாக 3.20 மணிக்கும், நெல்லைக்கு காலை 6.30 மணிக்கு பதிலாக 6.05 மணிக்கு சென்றடையும். கொல்லத்துக்கு மறுநாள் காலை 11.40 மணிக்கு பதிலாக 11.15 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கமாக கொல்லத்தில் இருந்து மதியம் 3.40 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 50 நிமிடம் முன்னதாக மதியம் 2.50 மணிக்கு கொல்லத்திலிருந்து புறப்பட்டு, சென்னை எழும்பூருக்கு அடுத்தநாள் காலை 6.05 மணிக்கு வந்தடையும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

The post அனந்தபுரி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் எழும்பூரிலிருந்து 20 நிமிடம் முன்னதாக புறப்படும்: தெற்கு ரயில்வே தகவல் appeared first on Dinakaran.

Tags : Ananthapuri High Speed Express ,Egmore ,Southern Railway ,Chennai ,Express ,Kerala ,Egmore, South ,Dinakaran ,
× RELATED வேளாங்கண்ணி – எழும்பூர் ரயில் புறப்படும் நேரம் மாற்றியமைப்பு!!