×

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்த 17 தமிழ்நாட்டு மீனவர்கள் விடுதலை..!!

கொழும்பு: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்த 17 தமிழ்நாட்டு மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் சிறையில் இருந்த 17 பேரின் காவல் முடிவடைந்த நிலையில் விடுதலை செய்து ஊர்காவல்துறை நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. கடந்த 14ம் தேதி ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை பகுதியில் இருந்து ஏராளமான விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர்.

தொடர்ந்து 3 விசைப்படகையும், அதில் இருந்த 17 மீனவர்களையும் சிறைபிடித்தனர். இதையடுத்து எல்லைதாண்டி மீன்பிடித்ததாக மீனவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து ஊர்காவல்படை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். அப்போது, 17 மீனவர்களையும் இன்று (செப்.27) வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். தற்போது நீதிமன்ற காவல் முடிந்த நிலையில், இன்று மீண்டும் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அச்சமயம், 17 தமிழ்நாட்டு மீனவர்களையும் விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. விடுதலை செய்யப்பட்ட 17 தமிழ்நாட்டு மீனவர்களும் ஓரிரு நாட்களில் தாயகம் திரும்புவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

The post எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்த 17 தமிழ்நாட்டு மீனவர்கள் விடுதலை..!! appeared first on Dinakaran.

Tags : Sri Lankan Navy ,Colombo ,Jaffna ,
× RELATED இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 3 படகு ஓட்டுநர்கள் விடுதலை