×

திட்டக்குடியில் நேபாள நாட்டு தொழிலாளி மர்ம சாவு

*போலீசார் தீவிர விசாரணை

திட்டக்குடி : ஓட்டலில் வேலை செய்து வந்த நேபாள நாட்டை சேர்ந்த தொழிலாளி, மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேபாள நாட்டின் ஸ்வர்கத்வாரி பகுதியை சேர்ந்தவர் பேஸ் பகதூர் பொன்மகர் மகன் ஜீபன் பொன்மகர்(22). இவர் திட்டக்குடி பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் ஒன்றரை ஆண்டுகளாக வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு வழக்கம்போல் வேலையை முடித்துவிட்டு பெருமுளை சாலையில் உள்ள ஓட்டலுக்கு சொந்தமான அறையில் தூங்க சென்று விட்டார். அவரது நாட்டை சேர்ந்த கிஷோர் அதிகாரி என்பவரும் அந்த அறையில் தங்கியிருந்தார்.

நேற்று அதிகாலை 2 மணி அளவில் கிஷோர் அதிகாரி எழுந்து பார்த்தபோது, ஜீபன் ெபான்மகர் இறந்து கிடந்தார். அருகில் எலக்ட்ரிக்கல் ஆட்டோ நிறுத்தப்பட்டிருந்தது. அதில் சார்ஜ் போட்டபடி இருந்துள்ளது. சார்ஜ் போட்ட போது மின்சாரம் தாக்கி ஜீபன் பொன்மகர் இறந்தாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் இறந்தவர் தலையின் பின்பகுதியில் காயம் காணப்பட்டது. எனவே வேறு காரணத்தால் இறந்தாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இறந்தவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உடற்கூறு ஆய்வு அறிக்கை வந்த பின்னரே அவரது இறப்புக்கான காரணம் தெரியவரும் என தெரிகிறது. மேலும் எலக்ட்ரிக் ஆட்டோவும் ஆய்வுக்காக எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. இது குறித்து திட்டக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த நபருடன் தங்கியிருந்த கிஷோர் அதிகாரியிடம் போலீசார் தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திட்டக்குடியில் நேபாள நாட்டு தொழிலாளி மர்ம சாவு appeared first on Dinakaran.

Tags : Mystery Sawu ,Stikkkulu ,Mystery Chau ,
× RELATED 18 வயது ஹாலிவுட் நடிகர் மர்ம சாவு