×

பல்லடம் அருகே அரசு பள்ளி வகுப்பறை கட்டிட திறப்பு

 

பல்லடம், செப்.27: பல்லடம் அருகேயுள்ள பணிக்கம்பட்டி ஊராட்சி சின்னிய கவுண்டம்பாளையத்தில் அரசு நடுநிலைப்பள்ளியில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான 2 வகுப்பறை கட்டிட திறப்பு விழா நேற்று நடைபெற்றது. தொடர்ந்து, திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் செல்வராஜ் எம்எல்ஏ வழிகாட்டுதலின் படி பல்லடம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பல்லடம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் என்.சோமசுந்தரம் ஆகியோர் முன்னிலையில் பல்லடம் ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி தலைமையில் பள்ளி வளாகத்தில் குத்து விளக்கேற்றுதல் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்குதல் நிகழ்வு நடைபெற்றது. இதனையடுத்து, பள்ளி வகுப்பறை கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் ஊராட்சி தலைவர் ரோஜாமணி ஈஸ்வரன், துணை தலைவர் முத்துலட்சுமி உதயகுமார், பொங்கலூர் ஒன்றிய குழு தலைவர் வக்கீல் எஸ்.குமார், பொங்கலூர் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் அசோகன், பல்லடம் ஒன்றிய குழு துணை தலைவர் பாலசுப்பிரமணியம், பல்லடம் மேற்கு ஒன்றிய துணை செயலாளர் ஆட்டோ குமார், மாவட்ட பிரதிநிதிகள் அன்பரசன், துரைமுருகன், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் சுரேஷ், இளைஞரணி அமைப்பாளர் ராஜேஸ்வரன், மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் பானுமதி, தகவல் தொழில் நுட்ப அணி லோகநாதன் மற்றும் கழக நிர்வாகிகள் சண்முகசுந்தரம், குழந்தைவேலு, பாலசுப்ரமணியம், கராத்தே காளியப்பன், கிருஷ்ணசாமி, வேலுச்சாமி தங்கராஜ், அங்கமுத்து, லோகநாதன் சத்தியமூர்த்தி, முருகன், தனபால், குமார், பாட்டன் மற்றும் ஆசிரியர்கள் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post பல்லடம் அருகே அரசு பள்ளி வகுப்பறை கட்டிட திறப்பு appeared first on Dinakaran.

Tags : Government ,School Classroom ,Palladam ,Panikkampatty panchayat ,Chinniya Goundampalayam ,
× RELATED அரசு பேருந்துகள் நிறுத்தும் ஓட்டல்களில் உணவு பொருட்கள் இருமடங்கு விலை