×

1,440 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

 

மதுரை, செப்.27: மதுரை கல்மேடு பகுதியில் உணவு கடத்தல் தடுப்பு போலீசார் நடத்திய திடீர் வாகன சோதனையில் 1,440 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதனை கடத்தியவருடன், கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்கள் பதுக்கப்படுவதை கண்காணிக்கும் பொருட்டு சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மதுரை உணவு கடத்தல் பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், எஸ்.ஐ. முத்துராஜா மற்றும் போலீசார் மதுரை கல்மேடு பகுதியில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்த போது வாகனத்தில் 1,440 கிலோ ரேஷன் அரிசி கடத்தி கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் ரேஷன் அரிசியை கடத்திய மதுரையை சேர்ந்த பாண்டி என்பவரை கைது செய்து, அரிசி மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

The post 1,440 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Madurai ,Kalmedu ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை