×

மாமரத்துப்பட்டியில் ரூ.18 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கும் பணி: அய்யப்பன் எம்எல்ஏ துவக்கி வைத்தார்

 

உசிலம்பட்டி, செப்.27: மாமரத்துப்பட்டியில் ரூ.18 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணியை அய்யப்பன் எம்எல்ஏ துவக்கி வைத்தார். உசிலம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட 1வது வார்டு மாமரத்துப்பட்டியில் குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டி அமைக்க பொதுமக்கள் அளித்த கோரிக்கையை ஏற்று உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் ரூ.18 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளார்.

மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கும் பணியை எம்எல்ஏ அய்யப்பன், உசிலம்பட்டி நகராட்சி சேர்மன் சகுந்தலா ஆகியோர் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தனர். தொடர்ந்து ஆர்.சி. சிறுமலர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தனது சொந்த செலவில் சுமார் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்கும் பணிகளை எம்எல்ஏ ஆய்வு மேற்கொண்டார்.

The post மாமரத்துப்பட்டியில் ரூ.18 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கும் பணி: அய்யப்பன் எம்எல்ஏ துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Ayyappan ,Mamaratpatti ,Uzilimbati ,Ayyappan MLA ,Mamarati ,Mamaratabad ,Dinakaran ,
× RELATED சபரிமலையில் நெரிசலை குறைக்க உடனடி முன்பதிவு ரத்து