- கட்டுமானத் தொழிலாளர்கள் ஒன்றியம் நிர்வாக கூட்டம்
- மதுராந்தகம்
- மதுராந்தகம்
- மத்திய ஐக்கிய நாடுகள்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- உடல் தொழிலாளர் நலன்
- கட்டுமானத் தொழிலாளர் சங்க நிர்வாக கூட்டம்
- மௌரிதீரியானம்
- தின மலர்
மதுராந்தகம்: தமிழ்நாடு கட்டுமான உடல் உழைப்பு தொழிலாளர் நல மத்திய ஐக்கிய சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் மதுராந்தகத்தில் உள்ள அந்த சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் குமார் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் ஜான் விஜயகுமார் முன்னிலை வகித்தார். மாநில பொது செயலாளர் ராஜசேகர் அனைவரையும் வரவேற்றார்.
கூட்டத்தின்போது, கிளை சங்கங்களின் செயல்பாடுகள் குறித்தும், மாநில பொதுக்குழு கூட்டம் நடத்துவது குறித்தும், அரசாங்க நலத்திட்ட உதவிகளை விரிவுபடுத்த கோருவது, சங்க விதிமுறைகளின் படி செயல்படுவது, சமூக பாதுகாப்பு திட்டங்களில் மகளிர் இணைந்து பயனடைவது, புதிய நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் தேர்வு செய்வது, பொதுக்குழு கூட்டம் நடத்துவது, கட்டுமான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் சுகாதாரத்தை பாதுகாக்கும் வகையில் பணி செய்ய முடியாமல் சிகிச்சை பெறுபவர்களுக்கு உதவித்தொகை வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில், சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் கண்ணன், பழனி, அர்ஜுனன், அபிராமி ராமு, தங்கபெரு தமிழமுதன் மற்றும் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
The post மதுராந்தகத்தில் கட்டுமான தொழிலாளர் சங்க செயற்குழு கூட்டம் appeared first on Dinakaran.