×

வேகத்தடையை கவனிக்காமல் சென்றதால் பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் பலி

அண்ணாநகர்: பெரவள்ளூர் பகுதியை சேர்ந்தவர் பத்மாவதி (54). இவர், கடந்த 3 நாட்களுக்கு முன், காய்கறி வாங்குவதற்காக தனது மகன் கண்ணனுடன் (27), பைக்கில் கோயம்பேடு மார்க்கெட் புறப்பட்டார். மார்க்கெட் அருகே உள்ள ஏ.ரோட்டில் சென்றபோது, வேகத்தடை இருப்பதை கவனிக்காமல், கண்ணன் பைக்கை வேகமாக ஓட்டியுள்ளார். இதனால், பைக் நிலை தடுமாறி, பின்னால் அமர்ந்திருந்த பத்மாவதி தூக்கி வீசப்பட்டு, தலையில் படுகாயம் ஏற்பட்டது. ரத்தவெள்ளத்தில் மயங்கிய அவரை உடனடியாக மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த பத்மாவதி நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து, கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.

The post வேகத்தடையை கவனிக்காமல் சென்றதால் பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் பலி appeared first on Dinakaran.

Tags : Annanagar ,Padmavathy ,Peravallur ,
× RELATED சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் டிரைவர் கைது