
சென்னை: வாரிசு சான்றிதழ் வழங்க மறுக்கும் அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உய்ரநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மனைவியை இழந்து குழந்தைகள் இல்லாத நிலையில் மரணமடையும் ஆணின் சகோதர, சகோதரிகளுக்கு வாரிசு சான்றிதழ் வழங்க இயலாது என ஐகோர்ட் உத்தரவுப்படி வாரிசு சான்று வழங்குவது குறித்து 2022-ல் விதிகள் வகுக்கப்பட்டு அரசாணை வெளியீடு செய்யப்பட்டது. வாரிசு சான்று தர மறுக்கும் அரசாணையை ரத்து செய்யக் கோரி அம்பத்தூரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
The post வாரிசு சான்றிதழ் வழங்க மறுக்கும் அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கு: தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு appeared first on Dinakaran.