×

இயற்கை விவசாயத்தை வலியுறுத்தி மலர் தொட்டிகளில் ‘கோ கிரீன்’ மலர் அலங்காரம்

ஊட்டி : இரண்டாம் சீசனுக்காக ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் அலங்காரம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இயற்கை விவசாயத்தை வலியுறுத்தி ‘கோ கிரீன்’ என மலர் தொட்டிகளை கொண்டு அலங்காரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆண்டு தோறும் ஊட்டியில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் முதல் சீசன் கடை பிடிக்கப்படுகிறது. செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் இரண்டாம் சீசன் கடை பிடிக்கப்படுகிறது. முதல் சீசன் போது வெளிமாநிலங்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து பல லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள்.
இதனால், இச்சமயங்களில் வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. மேலும், பல ஆயிரம் மலர் தொட்டிகளை ெகாண்டு பல்வேறு மலர் அலங்காரங்களும் மேற்கொள்ளப்படும். இரண்டாம் சீசனின் போது, மலர் கண்காட்சி மற்றும் அதிக அளவிலான மலர் அலங்காரம் மேற்கொள்ளப்படுவதில்லை.

எனினும், பூங்கா முழுவதிலும் மலர் செடிகள் நடவு செய்யப்படும். மேலும், குறைந்த அளவிலான மலர் தொட்டிகளில் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு மலர் அலங்காரம் மேற்கொள்ளப்படும். இந்நிலையில், இரண்டாம் சீசன் இம்மாதம் துவங்கிய நிலையில், தற்போது தாவரவியல் பூங்காவில் மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. மாடங்களில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலர் தொட்டிகளை கொண்டு மாடங்களில் பல்வேறு மலர் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

இது தவிர சிறிய புல் ைதானத்தில் சந்திரயான் 3 வடிவிலான அலங்காரம் சுமார் 3 ஆயிரம் மலர் தொட்டிகள் மற்றும் அழகு தாவரங்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மேலும், பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ள 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மலர் செடிகளிலும் மலர்கள் பூத்துள்ளன.

இது தவிர நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ‘கோ கிரீன்’ என்ற வாசகம் மேரிகோல்டு மலர் தொட்டிகளை கொண்டு அமைக்கப்பட்டு வருகிறது. மலர் தொட்டிகள் அடுக்கும் பணிகள் ஓரிரு நாட்களில் முடிந்தவுடன், இதனை காண சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post இயற்கை விவசாயத்தை வலியுறுத்தி மலர் தொட்டிகளில் ‘கோ கிரீன்’ மலர் அலங்காரம் appeared first on Dinakaran.

Tags : Ooty ,Ooty Government Botanical Garden ,Dinakaran ,
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா கண்ணாடி மாளிகையில் மலர் அலங்காரம்